Friday, May 17, 2024

பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள வாஸ்து..!!

அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்போம். அதேபோல் வீட்டு அமைப்பும் நமது உடல் அமைப்பும் இரண்டுமே ஒன்று தான்.

இங்கு நமது உடல், நமது இருப்பிடம், இந்த அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைத்த திகழ்கிறது.

பஞ்சபூதங்கள் தன்மைகள்

நீர் :

குடியிருப்பு, விவசாய நிலம், தொழிற்சாலை இவைகளில் நீர்நிலைகள் அமைத்தால் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு இந்த பகுதியில் மட்டுமே வாழவேண்டும்.

பூமி கீழ் தண்ணிர் தொட்டி அமைப்பு

சம்பு

போர்வெல்

கிணறு

சிறு வாய்க்கால் அல்லது ஓடை வடகிழக்கு பகுதியில் வருவது சிறப்பு

மற்ற பகுதிகளில் நீர் நிலைகள் வரும் பட்சத்தில் அந்த கெடுதலான பலன்களே நடைபெறும்.

நெருப்பு :

நாம் வசிக்கும் வீட்டியின் மொத்த அமைப்பிற்கு தென்கிழக்கில் மட்டுமே சமையல் அறை வைத்து கொள்ளலாம். தேவை கருதி வடமேற்கு பகுதியில் சமையல் அறை வைத்து கொள்ளலாம் , மற்ற எந்த பகுதியிலும் சமையல் அறை வருவதை தவிர்ப்பது நல்லது.அப்படி வரும் போது தவறான மிகக் கெடுதலான பலன்களே அந்த வீட்டில் ஏற்படுகிறது .

மண் :

மொத்த வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதி மண் தன்மைக்கு உரியது.

இந்த பகுதியை தமிழகத்தில் பல ஊர்களில் பல பெயரில் அழைக்கிறார் அதாவது குபேர மூலை , கன்னி மூலை , பழனி மூலை, நைருதி மூலை, நிருதி மூலை,என அழைக்கிறார்கள். நாம் விதைகளை போடும் போது மண்ணில் தான் போடுவோம் அப்போது தான் அது முளைத்து விருட்சியாகும்.

வாயு (காற்று) :

வடமேற்கு பகுதியை வாயு மூலை என்று கூறுகிறோம். நாம் வசிக்கும் வீட்டில் செப்டிக்டேங் இந்த பகுதியில் தான் அமைக்க வேண்டும். காரணம் அதில் உற்பத்தி கூட கூடிய வாயு காற்றில் கறைந்து மனிதனுக்கு எந்த வித கெடுதலும் ஏற்பட கூடாது என்பதற்காக.

வடமேற்கு ஒரு பகுதியை தவிர வேறு பகுதியில் கழிவறை குழி அமைப்பதால் பல கெடுதலான விளைவுகள் ஏற்படுகிறது.

ஆகாயம் :

ஆகயமானது நமது வீட்டில் தரைக்கும், முதல் தளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில் உள்ள வெற்றிட அமைப்பே நமக்கு ஆகாயமாக திகழ்கிறது .நமது வீட்டின் உள் அமைப்பில் High Celling அமைப்பு வரும் பட்சத்தில் இந்த ஆகாயம் என்கிற பூதமானது அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது கடுமையான கெடுதல் பலனை ஏற்படுகிறது .

மனித உடலமைப்பு :

இந்த பஞ்சபூதங்காலனது மனித உடலில் மூச்சு காற்றாகவும், வெப்பம் உயிர் துடிப்பாகவும், நீர் இரத்தமாகவும், மண் சதைகளாவும் எலும்புகளாகவும் இருந்து நம்மை இயக்கிறது .

இந்த ஆன்மாவானது நான்கு வித தோற்றமாக உருவாகி, ஏழு வகை பிறப்பாக பிறந்து, என்பத்து நான்காயிரம் யோனி போதங்களாக பிறந்து, சுக துக்கங்களை அனுபவித்து இறுதில் இறக்கும் இதுவே இயற்கையின் நீதி.

Related Articles

Leave a Reply

Latest Articles

Discover more from Devi Media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading