Friday, May 17, 2024

மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரம்

மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பலவித கருத்துக்கள் நிலவுகின்றது. அறையின் நீள அகலத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று சிலரும் அதனால் பாதிப்பு உண்டு என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

10 X 10 என்ற சதுர அமைப்பில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற நீண்ட சதுர அமைப்பிலும் அவ்வாறே இருக்கும். ஆனால் 10 X 10 என்ற இடத்தில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட தூர சதுர அமைப்பில் இருக்கும் கொள்ளளவும் நிச்சயம் மாறுபட்டதாகும்.

எனவே இந்த அடி கணக்குகள் ( நம் முன்னோர்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டு எழுதி வைத்தது ) நாம் உபயோகித்துக்கொள்வது தவறு அல்ல! ஆனால் அடிக்கணக்கு எவ்விதம் எடுக்க வேண்டும் என்பதை கீழே அளவுகளில் பார்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

அடி அளவு பலன்கள் நன்மை

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.
13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம் ,பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.
32 கடவுள் அருள் உண்டு . வாழ்வில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
33 நன்மையுண்டு.
34 குடி பெருகும்.
35 இலட்சுமி கடாட்சம்.
36 மத்திம பலன்.
37 லாபம் உண்டு, இன்பம் உண்டு.
38 கண்டிப்பாக தவிர்க்கவும் ,கெட்ட சக்திகளின் உறைவிடம்.
39 சுகம், இன்பம்.
40 வெறுப்பு.
41 செல்வம் பெருகும், இன்பம் உண்டு.
42 இலட்சுமி குடியிருப்பாள்.
43 சிறப்பில்லை.
44 கண் போகும்.
45 சகல பாக்கியம் உண்டு.
46 குடி பெயரும்.
47 வறுமை.
48 நெருப்பு பாதிப்பு ஏற்படுத்தும்.
49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.
68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.
87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து எடுத்து எழுதப்பட்டதாகும்.

Related Articles

Leave a Reply

Latest Articles

Discover more from Devi Media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading