Friday, May 17, 2024

நினைத்ததை நடத்திக் காட்டும் கல் உப்பு பரிகாரம்!!

காலையில் எழுந்தவுடனேயே இரு கைககளிலும் கல் உப்பைப் எடுத்துக் கொண்டு கிழக்குப் பார்த்து உட்காருங்கள். உங்கள் மடியில் ஒரு வெள்ளை காகிதத்தை வைத்துக்கொள்ளவும்.

குடும்பத்துக்குள்ளையே பிரச்சனையை இருந்தால் எனக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாதுனு வேண்டிக்கொள்ளுங்கள்.

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர்கள். நான் அவர்களைப் புரிந்துகொண்டேன்.

அவர்கள் என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.

அதேபோல, பணப் பிரச்சனையையும் கருத்தில் கொள்ளுங்கள்…; கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கிறது!!; என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொல்ல வேண்டும்!!

உடம்பில் ஏதாவது பிரச்சனை என்றால் எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்…!! நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்!!

மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்!! வாய் விட்டு சத்தமாகவும் சொல்லலாம். சுமார் 10 நிமிடம் சொல்லுங்கள்.

முடித்ததும் கையில் இருந்த உப்பை மடியில் இருக்கும் வெள்ளைத் தாளில் கொட்டி, ஓடும் நீரில் கலந்து விடலாம் இல்லை குளம், ஏரியில் கரைக்கலாம்.

நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்!! பத்து நாட்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும்.

“இது ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாக நம் மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் விஷயம்!!

நம் மக்கள் திருஷ்டி பாராயணம் செய்யும் போது கல் உப்புபை கையில் வைத்து சுற்றுவார்கள். சில கோவில்களில் உப்பு வாங்கி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

பாவத்தை போக்க கடலில் குளிப்பதும், கடல்நீரை தலையில் தெளிப்பதும், கடற்கரையில் ஈம சடங்கு செய்வதும், கடலில் கால் நனைப்பதும் என்ன காரணம்?

இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சில பேர் புறந்தள்ளுவார்கள். உண்மையில் இதில் ஒரு அறிவியல் இருக்கிறது. அந்த அறிவியலை “ஓரா சயின்ஸ்” என்று அழைபார்கள்!!

நெகட்டிவ் எனர்ஜி & பாசிட்டிவ் எனர்ஜி இவை இரண்டும் மனித குணத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது!!!

உப்பு எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் சக்தி வாய்ந்த பொருள்!!

உப்பை கையில் வைத்துக்கொண்டு நேர்மறையாக நினைத்தால்; அல்லது பேசினால் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறும்!!

நினைத்ததை நடத்திக் காட்டும் கல் உப்பு பரிகாரம்!!

இது மந்திரம் அல்ல!! முற்றிலும் அறிவியல்.

உடலில் எதிர்மறை ஆற்றல் வெளியாகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது; அதுவே அதிர்வுகளாக வெளிவரும், எதிர்க்கப்படும், எதிராளியின் அணுகுமுறையும் பாசிட்டிவ் ஆகிவிடும்.

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவாகாவே மாறிவிடுவோம், இதுவும் அறிவியல்.

எப்போதும் திட்டும் மாமியார் மருமகளை மரியாதையுடன் நடத்துவதும், என்றோ பிரிந்து சென்ற மகளைத் தேடி தாய் வருவதும். விபத்துகளில் இருந்து குணமாகிறதும் நேர்மறை ஆற்றலின் விளைவாகும்.

கிராமங்களில் உப்பு மட்டும் கடன் வாங்க வேண்டாம் என்று சொல்லுவர்கள், அப்படியே வாங்கினாலும் கையால் வாங்க மாட்டார்கள் அப்படி வாங்கினால் கொடுப்பவர்களின் நெகட்டிவ் எனர்ஜி வாங்குபவர்களுக்கு வந்து சேரும். அதனால் உப்பை தவறுதலாக பயன்படுத்தவேண்டாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் உடனே வீடு வந்து சேர சில வழிமுறைகள்!!

Related Articles

Leave a Reply

Latest Articles

Discover more from Devi Media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading