தேவையான பொருட்கள்:
மைதா – ¼ கிலோ
டால்டா – ¼ கிலோ
சீனி – ½ கிலோ
ஏலக்காய் – ½ தேக்கரண்டி
செய்முறை :
வாணலியில் டால்டாவை சுமார் 75 கிராம் காய வைத்து, மைதாமாவில் சிறிது, சிறிதாக ஊற்றி நன்றாக பிசையவும்.
மாவு உதிரியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் மெதுவாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு பூரி பலகையில், பூரி போல் விரித்து அரை சென்டிமீட்டர். இடைவெளி விட்டு, ஓரங்களில் வெட்டாமல் நடுவில் மாத்திரம் கத்தியால் நீள நீளமாக கீரி பூரியை கையால் மெதுவாக சுருட்டி, ஓரங்கலை அழுத்ட் வைக்கவும்.
இதேபோல் மீதி மாவையும் செய்து வைத்துக் கொள்ளவும். சீனியை, பாகு கம்பிப்பதம் வரும் வரை காய்ச்சி, இறக்கி வைத்துக்கொள்ளவும்.
மீதி டால்டாவை வாணலியில் ஊற்றி, காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும், பூரிகளை மெதுவாக எடுத்து போட்டு சிவந்ததும் எடுத்து, சீனிப்பாகில் போட்டு உடனே எடுத்து தாம்பளத்தில் வைக்கவும்.
குறிப்பு: விரும்பினால் மைதா மாவுடன் பச்சை கலர் சேர்த்துக்கொள்ளலாம்.