பொரிக்கடலை சட்னி செய்வது எப்படி!!

இட்லி தோசையில் சட்னி, சாம்பார், பொடி என ஏதாவது இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்ற சட்னிகளை தினமும் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

தேவையானவை :

தேங்காய்       –     1

பொரிகடலை    –     50 கிராம்

பச்சை மிளகாய்  –     5

செய்முறை :

தேவையான உப்பு சேர்த்து உரலில் போட்டு கரகரப்பாய் ஆட்டி தேவைக்கு ஏற்ப கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்புப் போட்டு சிவந்ததும், கருவேப்பிலை போட்டு பொரித்து சட்னியில் ஊற்றவும்.

பிரியப்பட்டால் கருவேப்பிலையுடன் வடகத்தூள் அல்லது 2 வற்றல் கிள்ளிப்போட்டுப் பொரித்து ஊற்றாலாம்.

சட்னியை உரலிலிருந்து எடுக்கும் முன் புளி சிறிதளவு, வெங்காயம் 3, பூண்டு 2 பல் சேர்த்து ஆட்டி எடுக்கலாம்.

இதையும் செய்யாமலே!: அடை தோசை செய்வது எப்படி!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply