நற்குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் அந்தணரின் மனையோ(அ) வீடோ இருப்பின் நன்மையே விளையும்.

பசுக்களின் வருகையைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு மனையோ (அ) வீடோ அமைந்திருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையும் செல்வ வளமும் உண்டாகும்.

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்புறத்தில் பூந்தோட்டம், நீர்பாயும் ஒடை முதலியன இருந்தால் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்.

மனைக்குத்து தோஷத்தில் இல்லாத அமைப்புக்கள் வந்தால் நன்மையே விளையும்.

சூரியனையும் சந்திரனையும் எப்போதும் (அந்தந்தக் காலத்தி) பார்ப்பதற்கு ஏற்றவாறு மனையே அல்லது வீடோ அமைந்திருந்தால் மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். அனைத்து விதமான வளங்களுடனும் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.

மனைக் குத்துகளுக்கான பரிகாரம்.

முன்னர்ப் பலவகைக் குத்துக்களால் மனைக்குத் தோஷம் ஏற்படும் என்பதையும் அவைகளால் என்னென்ன கெடுபலன்கள் நடைபெறும் என்பதையும் கண்டோம். இப்படிக் குத்துதோஷம் பெற்ற மனைதான் நமக்குத் கிடைத்தது என்றாலோ அல்லது இப்படிப்பட்ட இடத்தில்தான் வீடுகட்டுவேன் என்று அடம்பிடித்திருந்தாலோ இவற்றிற்கு எல்லாம் பரிகாரமாக ஒரு விதி இருக்கின்றது. அவ்விதிப்படி வீடோ அல்லது மனையோ இருந்தால் எந்தவிதமான குத்து தோஷம் அவற்றிற்கு இல்லை என்றே கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply