ஆகாயத்தில் அழகிய மாளிகை - அக்பர் பீர்பால் கதைகள்

அக்பர் ஓர் நாள் பீர்பாலிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார்.

பீர்பால், மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடி, முயன்றால் முடியும் மன்னா என்றார். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார்.

இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் பீர்பால்.

பீர்பால், அரசே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால். தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார் அக்பர்.

பீர்பால் வேடன் ஒருவனிடமிருந்து சில கிளிகளை வரவழைத்துக் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். மன்னரிடம் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாக பீர்பால் மன்னருக்கு தகவல் அனுப்பினார்.

மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்த பீர்பால்ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு தேவையான ஆட்கள் அனைவரும் தயாராக உள்ளார்கள். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம் என்றார் பீர்பால்.

உடனே மன்னர் பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார். கிளிகள் உள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர். அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது.

பீர்பால் இது என்ன? என்றார். மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டிடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால்.

அக்பருர் ஆகாயத்தில் மாளிகை கட்ட முடியாது என்பதை புரிந்து கொண்டார். நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார். பீர்பால் கிளிகளுக்கு கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு கற்றுக் கொடுத்திருப்பதை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply